ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்.. தெரிந்து கொள்ளுங்கள்..!!
iyyappan special 23
ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள் :
1. மோகம் :
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படும் என்பதை உணர்த்துகிறது.
2. குரோதம் :
கோபம் குடியைக் கெடுத்து, கோபம் கொண்டவனையும், அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்துவிடும் என்பதை உணர்த்துகிறது.
3. லோபம் :
பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை உணர்த்துகிறது.
4. மதம் :
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்துவிடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை உணர்த்துகிறது.
5. மாத்ஸர்யம் :
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும் என்பதை உணர்த்துகிறது.
6. வீண் பெருமை :
இது பெரிய அசுர குணத்தை உருவாக்கும். ஆகவே, அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது என்பதை உணர்த்துகிறது.
7. அகந்தை :
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை என்பதை உணர்த்துகிறது.
8. சாத்வீகம் :
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
9. ராஜஸம் :
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது என்பதை உணர்த்துகிறது.
10. தாமஸம் :
அற்ப புத்தியுடன் செயல்படுவது, மதி மயக்கத்தால் தீமை செய்வது ஆகியவை கூடாது என்பதை உணர்த்துகிறது.
11. ஞானம் :
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும், பேரறிவு என்பதை உணர்த்துகிறது.
12. மனம் :
நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
13. அஞ்ஞானம் :
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள் என்பதை உணர்த்துகிறது.
14. கண் :
ஆண்டவனை கண்கூட பார்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
15. காது :
ஆண்டவனின் மேலான குணங்களை கேட்டு, அந்த ஆனந்த கடலில் மூழ்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
16. மூக்கு :
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
17. நாக்கு :
கடுஞ்சொற்கள் பேசக்கூடாது என்பதை உணர்த்துகிறது.
18. மெய் :
இரு கரங்களால் இறைவனை கைகூப்பி தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.