கருட புராணத்தின் படி.. துரோகம், உழைப்பை சுரண்டுதல், வீண்பழி, தெய்வ நிந்தனைக்கு என்ன தண்டனை தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


இந்து மத புராண காவியங்களின்படி பல வாழ்வியல் நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக ஒவ்வொரு பாவத்திற்கும் புண்ணியத்திற்கு வழங்கப்படும் விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. 

அசிபத்திரம்:

தெய்வங்களை நிந்தனை செய்தவர்களுக்கும் ,சாஸ்திரங்கள் கூறும் அறநெறியை கைவிட்டு தீய நெறிகளை பின்பற்றியவர்கள் அடையும் நரகம். இங்கு பாவிகள் கொடிய பூதங்களால் துன்புறுத்தப்படுவார்கள் .எப்போதும் அச்ச உணர்விலே காலம் கழியும்...

பன்றிமுகம்:

குற்றமற்றவரை தண்டிப்பது, பிறர்மீது வீண்பழி சுமத்துவது, அநீதிக்கு துணை போவது போன்ற பலவகை கொடுமைகளை செய்பவர் அடையும் நரகம். இங்கு பாவிகள் பன்றிமுகத்துடன் கூர்மையான பற்களுடன் காணப்படும் கொடிய மிருகத்தின் வாயில் அகப்பட்டு, பற்களால் கடிபட்டு அல்லல்படுவார்கள்..

அந்தகூபம்:

உயிர்களை சித்ரவதை செய்தல், சக மனிதர்களுக்கு துரோகம் செய்தல், கொடுமையாக கொலை செய்தல் ஆகிய குற்றங்களை செய்த பாவிகள் அடையும் நரகம்.. இந்நரகத்தில் அகப்பட்ட பாவிகளை கொடிய மிருகங்கள் கடித்து குதறும், அரிய வகை மாடுகள் பாவிகளை முட்டி மோதி கீழே தள்ளி துன்புறுத்தும்..

கிருமிபோஜனம்:

பிறரை பட்டினிபோட்டு பிறரது உழைப்பை சுரண்டி தான் மட்டும் உண்டு பிழைக்கின்ற பாவிகளும், பக்தி நியமங்களை கடைபிடிக்காதவர்களும் அடையும் நரகம்.. இங்கு பிறவற்றை துளைத்து செல்லும் இயல்புடைய கொடிய கிருமிகள் பாவிகளின் உடலை கடித்து துளையிட்டு துன்புறுத்தும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Garuda Puranam Punishment for Betrayal, exploitation of labor, vengeance


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->