4 கிலோ தங்கம் மாயம்: சபரிமலை கோயில் சிக்கல் தீவிரம் முன்னாள் தேவசம் தலைவர் பத்மகுமாரும் கைது
4 kg gold missing Sabarimala temple trouble intensifies former devasam chief Padmakumar also arrested
சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகளும் துவாரபாலகர் சிலைகளும் பராமரிப்பு பணிகளுக்காக 2019-ம் ஆண்டு அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. அப்போது துவாரபாலகர் சிலைகளின் கவசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியை பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் ஏற்று, கவசங்களை சென்னைக்கு கொண்டு வந்தார்.

ஆனால் அதிர்ச்சி திருப்பமாக, அந்த கவசங்களில் இருந்ததாகக் கூறப்படும் சுமார் 4 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த முறைகேடு தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை உள்ளூர் போலீசாரால் நடத்தப்பட்ட நிலையில், வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவான எஸ்.ஐ.டி-க்கு மாற்றப்பட வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எஸ்ஐடி விசாரணை தொடங்கியதும், முக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட உன்னிகிருஷ்ணன் உடனடியாக கைது செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து, சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி பி. முராரி பாபு, முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமார் உள்ளிட்ட பலரும் தொடர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சபரிமலை தங்கத்தகடு மறைமுக திருட்டு வழக்கில் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரிடம் நேற்று எஸ்ஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தங்கத்தகடு மோசடியுடன் அவருக்கும் நேரடி தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.இதையடுத்து, இந்த வழக்கில் ஐந்தாவது குற்றஞ்சாட்டப்பட்ட நபராக முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
4 kg gold missing Sabarimala temple trouble intensifies former devasam chief Padmakumar also arrested