இன்றைய தினம் சிறப்பான பலன்களை பெறப்போவது யார்.? இன்றைய (27-09-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். முக்கியமான முடிவினை எடுக்கும் பொழுது அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வரவு மேம்படும் நாள்.

ரிஷபம்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டாளிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

மிதுனம்

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வீட்டில் மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றங்களை செய்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம்

உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் லாபகரமான கண்ணோட்டம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணிவு நிறைந்த நாள்.

சிம்மம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் கவனம் வேண்டும். முக்கியமான முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த சில பொறுப்புகள் குறையும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

கன்னி

புதுவிதமான அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பலரின் ஆதரவை பெறுவீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சோர்வு நீங்கும் நாள்.

துலாம்

நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழி உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உலகியல் வாழ்க்கையை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.

விருச்சிகம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வர்த்தக பணிகளில் லாபகரமான சூழல் அமையும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.

மகரம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். புதிய பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

கும்பம்

எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் செயல்படவும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களுடன் விவாதங்கள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களின் தன்மையை புரிந்து கொள்வீர்கள். நிதானம் வேண்டிய நாள்.

மீனம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வாக்குறுதிகளை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். அமைதி வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27.09.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->