இன்றைய (25-09-2022) ராசி பலன்கள்.. யாருக்கு வரவு?.. யாருக்கு பாராட்டுகள் கிடைக்கும்? - Seithipunal
Seithipunal


மேஷம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பங்காளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். வரவு மேம்படும் நாள்.

ரிஷபம்

கால்நடை தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். தடைகள் விலகும் நாள்.

மிதுனம்

மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அமைதி வேண்டிய நாள்.

கடகம்

வியாபாரத்தில் தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சோர்வு நீங்கும் நாள்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பலரின் ஆதரவை பெறுவீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.

கன்னி

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எண்ணிய சில காரியங்களில் அலைச்சலுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

துலாம்

வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

தனுசு

புதிய ஆராய்ச்சி தொடர்பான தேடல் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆசைகள் மேம்படும் நாள்.

மகரம்

புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

கும்பம்

மனதில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாழ்க்கை துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான உதவி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றமான சூழல் அமையும். நிறைவான நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25.09.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->