இன்றைய தினப்பலன்கள்... உங்கள் ராசிக்கு பாராட்டுகள் கிடைக்கப் போகிறது.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ரகசியங்களை வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  முதலீடு தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.

மிதுனம்:

மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வாழ்க்கைத்துணைவர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்:

அரசு சார்ந்த செயல்பாடுகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். வியாபார விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உதவிகளில் கவனம் வேண்டிய நாள்.

சிம்மம்:

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

கன்னி:

தம்பதியருக்குள் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்களின் மீதான ஆர்வம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

துலாம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் உயர் கல்வி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் எண்ணியவை நிறைவேறும். வரவு மேம்படும் நாள்.

விருச்சிகம்:

மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.

தனுசு:

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வியாபார பணிகளில் புதிய வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். சக ஊழியர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். அன்பு நிறைந்த நாள்.

மகரம்:

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நேர்மறையான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆசை அதிகரிக்கும் நாள்.

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் தோன்றும் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். இன்னல்கள் நீங்கும் நாள்.

மீனம்:

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 feb rasipalan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->