இன்றைய (15-05-2022) ராசி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இனிமையான நாளாக அமைய போகிறது.? - Seithipunal
Seithipunal


மேஷம்

தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தைரியமாக முடிவினை எடுப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.

ரிஷபம்

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். வியாபார பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டார தொடர்புகளின் மூலம் லாபம் ஏற்படும். கலை பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றம் பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்பம் நிறைந்த நாள்.

கடகம்

தாய்வழி உறவினர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். உடனிருப்பவர்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். சொத்துக்களை வாங்குவது, விற்பது தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

சிம்மம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பத்திரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மேன்மையான நாள்.

கன்னி

மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் எதிர்பாராத சில வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.

துலாம்

சமூகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மத்திமமான பலன்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்களும், ஆசைகளும் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடனை அடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய முதலீடு தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். இழுபறிகள் குறையும் நாள்.

தனுசு

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

மகரம்

உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கும்பம்

உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். விளையாட்டு பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

மீனம்

வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். புதிய வகை உணவுகளில் கவனம் வேண்டும். வரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15.05.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->