இந்த நாளை இனிமையான நாளாக்கும்... இன்றைய ராசிபலன்கள்..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளால் தனலாபம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். நிர்வாக துறையில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் ஆதரவு உண்டாகும். ஆதாயம் கிடைக்கும் நாள்.

ரிஷபம்:

இழுபறியான சில விஷயங்களுக்கு சாதகமான முடிவு எடுப்பீர்கள். உறவினர்களின் மூலம் ஆதரவு ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

மிதுனம்:

வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவு மேம்படும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதாயமான நாள்.

கடகம் :

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுவோருக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.

சிம்மம்:

குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். மேன்மையான நாள்.

கன்னி:

வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிகம் மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

துலாம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதால் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். கவனக்குறைவினால் சில அவப்பெயர்கள் ஏற்படும். அமைதியான நாள்.

விருச்சிகம்:

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். நிம்மதியான நாள்.

தனுசு:

கலைத்துறை சார்ந்தவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். தொழில் நிமிர்த்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

மகரம்:

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கலைப்பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பாராத வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.

கும்பம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். வாகன பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வான நாள்.

மீனம்:

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிலருக்கு குழப்பமான கனவுகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 jan rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->