இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள்.. இன்றைய (11-09-2022) ராசி பலன்கள் - Seithipunal
Seithipunal


மேஷம்

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனைகளை வாங்குவது சார்ந்த முயற்சிகள் ஈடேறும். தனவரவு சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத உதவி கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு காண்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்

வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நம்பிக்கை நிறைந்த நாள்.

மிதுனம்

ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் ஏற்படும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். வாழ்க்கை துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.  உதவி கிடைக்கும் நாள்.

கடகம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

சிம்மம்

அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. மறதி நிறைந்த நாள்.

கன்னி

சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

துலாம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நேர்மறையான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். சக ஊழியர்களால் ஆதரவான சூழல் அமையும். கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் சிலருக்கு சாதகமாக அமையும். வியாபார பணிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். யோகம் நிறைந்த நாள்.

தனுசு

அனுபவமுள்ள பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் புதிய மாற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். கலை சார்ந்த அறிவு மேம்படும். எந்தவொரு செயலிலும் வேகம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்

மனதில் இருக்கக்கூடிய சில விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப வரவு மேம்படும். விரும்பிய உணவினை உண்டு மகிழ்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

மீனம்

எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்படவும். சலனம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11.09.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->