இன்றைய ராசிபலன்கள்.. சிறப்பான பலன்களை பெறும் ராசிக்காரர்கள் யார்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவர் உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வார். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்:

நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நேர்மறை சிந்தனையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

மிதுனம்:

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.

கடகம்:

மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.

சிம்மம்:

எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

கன்னி:

சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டிய நாள்.

துலாம்:

உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துக் கொள்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்:

தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குழந்தைகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.

தனுசு:

உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

மகரம்:

பிள்ளைகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீட்டில் மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர்நிலை கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்:

சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். விரயங்கள் நிறைந்த நாள்.

மீனம்:

சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய நபரின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சுபிட்சம் நிறைந்த நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07 mar rasipalan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->