கணவனுடன் கருத்து வேறுபாடு.. போன் செய்து விட்டு மயமான டிக்டாக் பிரபலம்.!
tiktok fam women left home for husband and wife problem
கோவை மாவட்டம் சூலூர் அருகே காடம்பாடி பகுதியைச் சேர்ந்த 22 வயது கலையரசன் கரகாட்டம், பறை, சிலம்பம் போன்றவற்றை கற்றுக் கொடுக்கும் மையம் நடத்தி வருகின்றார்.
இவருக்கு சென்னையைச் சேர்ந்த டிக் டாக் பிரபலமான பிரகலட்சுமி என்ற பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல சம்பவ தினத்தன்று கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில் கலையரசன் வெளியே சென்றுள்ளார்.
அப்பொழுது, தனது கணவருக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு செல்வதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரது போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். மனைவியை அக்கம் பக்கம் தேடிய கலையரசன் கிடைக்காத காரணத்தால் சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் பிரகலஷ்மியை தேடி வருகின்றனர்.
English Summary
tiktok fam women left home for husband and wife problem