'தற்காலிக தற்குறி' ஸ்டாலின் செய்த வேலையால், கொடிகட்டி பறக்கும் திமுக மானம்.!
stalin statement viral in social media
திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக அதிருப்தியிலிருந்த ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
டெல்லி சென்ற அவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். தன்னுடைய தொகுதி மேம்பாட்டுக்காக சந்திக்க வந்ததாக தெரிவித்த அவர், பாஜகவில் இணையவில்லை எனவும் கூறினார்.
திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படும் செல்வம் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததை ஒட்டி அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. என திமுக தலைவர் ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இணையத்தில் ஸ்டாலின் வெளியிட்ட ஒழுங்கு நடவடிக்கை அறிக்கையானது இணையத்தில் நகைப்புக்குள்ளாகி வருகிறது. அதில், எழுத்துப்பிழைகள் இருப்பதாக, ' முத்தமிழ் அறிஞர் கலைஞ்சருக்கு இப்படி ஒரு மகனா?' என்ற வகையில் விமர்சங்கள் எல்லை மீறி செல்கின்றது.
English Summary
stalin statement viral in social media