2வது கணவரின் குழந்தையை சொந்தம் கொண்டாடிய நான்காவது காதலன்.! அதிர்ச்சியில் மூன்றாவது கணவர்.!
WOMEN MARRIAGE AND BABY PROBLEM IN RAMNADU
ராமநாதபுரம் மாவட்டத்தில் சரத் என்பவர் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 8 மாதக் குழந்தையை விற்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்ட பெண்ணையும், குழந்தையையும் அலுவலகத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர்.
அந்தபெண் கூறியதை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் மூழ்கி இருக்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திருமணமாகி இருக்கின்றது. ஆனால், அந்த பெண்ணுக்கு வினோத் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் முதல் கணவர் விவாகரத்து செய்து இருக்கின்றார்.
இதனை தொடர்ந்து வினோத்தோடு சேர்ந்து வாழ்ந்து வருகையில் வேலைக்காக வினோத் வெளிநாடு சென்ற போது அங்கேயே இறந்துவிட்டார். அதன் பின்னர் அந்த பெண் மூன்றாவதாக ஒரு மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு அவருக்கு பிறந்த குழந்தையை வினோத்தின் உறவினர்களிடம் கொடுத்து இருக்கின்றார்.
ஆனால், தற்போது புதிய பிரச்சனையாக வினோத் வெளிநாடு சென்ற போது எனக்கும் அந்த பெண்ணுக்கும் தொடரபு ஏற்பட்டதாக கூறி அந்த குழந்தை என்னுடையது என்று நான்காவதாக ஒரு நபர் எண்ட்ரீ ஆகி இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் குழந்தையை குழந்தையை காப்பகத்தில் கொடுத்து டி என் ஏ சோதனைக்கு உத்தரவிட்டு இருக்கின்றனர்.
English Summary
WOMEN MARRIAGE AND BABY PROBLEM IN RAMNADU