ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி கைது.! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கானா மாநில ஒய் எஸ் ஆர் கட்சியின் தலைவர் ஷர்மிளாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள சந்திரசேகர் ராவின் ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இதற்காக தெலுங்கானாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதற்காக அவர் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில், கடந்த வாரம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது காரில் இருந்து இறங்க மறுத்ததால் காரோடு அவரை கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்த பகுதியில் அம்பேத்கர் சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YSR sharmila arrested in Hyderabad


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->