ரொம்ப தப்பு! கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள்...! - ராஜீவ் சுக்லா - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ''RCB ஈபிள்''  வெற்றி கொண்டாத்திற்காக கூட்டம் கூடியது.இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் இந்தியாவையே உலுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த கோர சம்பவத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் 'டி.கே. சிவகுமார்' மனதார மன்னிப்பு கோரியுள்ளார்.

இதனிடையே, இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் 'விஜயேந்திரா' தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று BCCI துணை தலைவர் ''ராஜீவ் சுக்லா'' தெரிவித்துள்ளார்.

ராஜீவ் சுக்லா:

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "பெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடந்தாலும் நாம் அதை அரசியல் செய்ய கூடாது.

அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என RCB அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது" என்று தெரிவித்தார்.இந்தக் கருத்துக்கு அவர் இணையத்தில் கடுமையான விமர்சனங்களை சந்திரத்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You are making politics out stampede incident Rajiv Shukla


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->