போட்டியின்றி தேர்வான அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்.. பேரதிர்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதுவரை திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் திமுக கைப்பற்றியுள்ளது. மேலும், அதிமுக கோட்டையாக கருதப்படும் இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஒரு சில இடங்களை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 9 வது வார்டில் போட்டியிட்டு வென்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wining admk candidate join dmk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->