கவுன்சிலருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்.. காரணம் என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


டெல்லியில் விரைவில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தேர்தல் நேரத்தில் பலரும் விதவிதமான செயல்களில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் கிழக்கு டெல்லியை சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர், ஹசீப்-உல்-ஹசன் என்பவர் அப்பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் சாக்கடை தொட்டியில் இறங்கி அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார்.

இதனால் அசுத்தமடைந்த அவர் மீது, ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பால் ஊற்றி குளிப்பாட்டியுள்ளனர். இதுகுறித்து ஹசீப் கூறுகையில், "கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி வழிகிறது என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், பாஜக கவுன்சிலரும் பாஜக எம்எல்ஏவும் உதவி செய்யவில்லை. ஆகவே நானே இறங்கி வேலை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Volunteers anointing the Councilor in Delhi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->