கிறிஸ்மஸ், புத்தாண்டு வரும் வேளையில் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.. கொந்தளிக்கும் விஜயகாந்த்.!!
vijayakanth statement on dec 19
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைபிடித்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படை கடந்த வாரம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது மீனவர்களை சிறைபிடித்து, படகுகளை பறிமுதல் செய்திருப்பதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரும் இவ்வேளையில் மீனவர்களை சிறைப்பிடித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலை எதிர்காலத்தில், நிகழாத வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
vijayakanth statement on dec 19