விஜய் மாஸ் மூவ்! விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்! ஆதவ் அர்ஜுனா சொன்ன தகவல்! நடந்தா மாஸா இருக்குமே!
Vijay is going to take up 2 mega projects Information given by Adhav Arjuna
தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைப்பது மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கோவையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சாலை பாதுகாப்பு, இளைஞர்களின் போதைப் பழக்கம் மற்றும் விளையாட்டு மேம்பாடு தொடர்பாக அரசின் திட்டங்களை விளக்கினார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சுமார் 18,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, இது மிகவும் கவலைக்குரிய நிலைமை என தெரிவித்தார்.“இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன. மேம்பாலங்கள், அகலப்படுத்தப்பட்ட சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், சாலை பாதுகாப்பு அம்சங்களுக்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை,” என்றார்.
அதிவேகம், பாதுகாப்பற்ற யூ-டர்ன் பகுதிகள், சிக்னல் வசதியின்மை மற்றும் நெடுஞ்சாலைகளுடன் இணைந்த கிராமப்புற சாலைகளின் குறைபாடுகள் விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர் கூறினார்.
இதனை கருத்தில் கொண்டு, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும், இது தொடர்பான பரிந்துரைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் இதற்கு தீர்வு காண அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.“பள்ளிப் பருவத்திலேயே போதைப் பழக்கம் உருவாகும் சூழல் காணப்படுகிறது. இதை தடுப்பதற்காக விளையாட்டு துறையில் அதிக முதலீடு செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்,” என்றார்.
தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு மைதானங்களை ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக:
ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், மாவட்ட வாரியாக எந்தெந்த இடங்களில் விளையாட்டு வசதிகள் உள்ளன, எங்கு பயிற்சி பெறலாம் போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு எளிதாக வழங்கும் வகையில் புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
கோவை நேரு ஸ்டேடியம் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக கூறிய அமைச்சர், அதை சென்னை நேரு ஸ்டேடியம் தரத்திற்கு உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு துறையை மாநில அளவில் மறுசீரமைக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் விரைவில் புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளதாக அரசுத் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாலை பாதுகாப்பு மற்றும் இளைஞர் நலன் ஆகிய இரண்டையும் இணைத்து நீண்டகால திட்டமிடலுடன் அரசு செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Vijay is going to take up 2 mega projects Information given by Adhav Arjuna