உச்சகட்ட பரபரப்பில் அரசியல் கட்சியினர்.. இன்று வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதற்காக மாநகராட்சி பகுதியில் 15,158 வாக்குச் சாவடிகளும், நகராட்சி பகுதியில் 7,417 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்பட்ட அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவில் முன்னிலை நிலவரம் காலை 10 மணிக்கு தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

urban local election results


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->