சமயலறையில் விழுந்த வெடிகுண்டு.! ரஷ்ய அதிபரை கேள்வி கேட்கும் மூதாட்டி.! - Seithipunal
Seithipunal


உக்ரேன் மரியபோல் துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அங்குள்ள கடற்கரையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை தற்போது செய்து வருகிறது. அது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளது.

இதற்கிடையே ரஷ்ய வான் தாக்குதலில் வீட்டை இழந்த மூதாட்டி ஒருவர், அதிபர் புதினுக்கு, 'ரஷ்யா உங்களுக்குப் போதவில்லையா?' என்று அவர் எழுப்பிய கேள்வி அடங்கிய காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டின் பகமுட் பகுதியில் ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில் அந்த பகுதியை சேர்ந்த மரியா என்ற மூதாட்டியின் வீட்டு சமையல் அறையில் ஒரு வெடிகுண்டு விழுந்து வெடித்தது.

அவரின் வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. இடிபாடுகளுக்கிடையே வசித்து வரும் அந்த மூதாட்டி, தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ரஷ்ய அதிபரின் பார்த்து, "உங்களுக்கு ரஷ்ய நாடு போதவில்லையா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "தாங்கள் செய்வது சரிதானா என்பதனை இறைவன்தான் ரஷ்யர்களுக்கு புரிய வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine old lady viral video


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->