உதயநிதி ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழ்த்திய பெண்மணி.. பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகையால், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு பெண் அவரிடம் வந்து, கூட்டுறவு நகை கடன் தரலை?’  என உதயநிதியிடம் கேட்க எழுப்பினர். அதற்கு அங்கிருந்த திமுகவினர் அந்தப் பெண்மணியை மிரட்டி அமர வைத்தனர். 

தொடர்ந்து பேசி உதயநிதி ஸ்டாலின், நாங்கள் சொன்னதை செய்தோம். எப்படி சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதோ, அதே போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். நீங்கள் செய்வீர்களா என கேட்டார். இதையடுத்து, மீண்டும் அந்த பெண் கூட்டுறவு நகை கடன் என் தரலை என கூறினார். 

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அந்த ஒரு பெண்மணியிடம் அமைதியாக இருக்கிறாயா.? இல்லையா.? என மிரட்டினர். இவற்றையெல்லாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின், எதுவும் நடக்காத மாதிரி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வேறு ஒரு சம்பவத்தை பேசத் தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanidhi stalin election campaign in karur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->