சசிகலா சிறையில் இருக்கும் போது., எடப்பாடி பழனிசாமி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி தினகரன்!
TTV Say About EPS AND Sasikala 2022
நேற்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "வரும் மக்களவை பொதுத்தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நடைபெறலாம். ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலையை பார்த்தால் 1991 ஆம் ஆண்டு நடந்ததுபோல் ஆட்சி கலைக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இயக்கத்தின் மூலம் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
என்னுடைய கருத்தும், பன்னீர்செல்வம் கருத்தும் ஒன்றாக ஒன்றாக இருக்கிறது. நான், ஓபிஎஸ், சசிகலா நேரம் வரும்போது ஒன்றிணைவதில் எந்த தவறும் இல்லையே? சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமி கூட நேரம் வரும்போது எங்களுடன் இணையலாம்.
உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியாது. சசிகலா சிறையில் இருந்த நேரத்தில் நானும், அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அவரை பார்க்க சென்றோம்.
ஆனால், எங்களுடன் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அவர் சொல்கிறார், 'ஒரு லோக் ஆயுத்தா பிரச்சினை இருக்கு, நான் வந்தால் என்னை கைது செய்து விடுவார்கள்' என்றார் எடப்பாடி பழனிசாமி.
சசிகலாவிடம் நான், 'எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயந்து விடுவார். நீங்கள் தவறான ஆளை முதல்வர் பதவியில் அமர வைத்துள்ளீர்கள்' என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Say About EPS AND Sasikala 2022