அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து டிடிவி தினகரன் அளித்த பரபரப்பு பேட்டி.!
ttv dhinakaran say about bjp election
இன்று சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "ஏற்கனவே திமுக ஆட்சி வந்தால் என்ன நடக்கும் என்று தெரியும்., தற்போது அவர்களின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.
இப்போது மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி வார்டு வாரியாக திமுக வெற்றி பெற மக்கள் அனுமதித்தார்கள் என்றால்.,
ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று., திமுகவை வெற்றிபெற அனுமதித்தால்., மிகப்பெரிய அழிவில் முடியும்.
இதனை உணர்ந்து இந்த தேர்தலில் நல்லவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். காசுக்காக வாக்களிக்காமல், நல்ல வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நிச்சயமாக நல்ல வேட்பாளர்களை வாய்ப்பு தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட செய்திருக்கிறோம். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
எங்கள் வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருக்கின்றனர். அனைத்தும் முடிந்த பிறகு எந்த எவ்வளவு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது என்பதை நாங்கள் வெளியிடலாம் என்று இருக்கிறோம்." என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், 'அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி இருக்கிறது' இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன்,
"எடப்பாடியை பற்றி பாஜக காலதாமதமாக புரிந்து கொண்டுள்ளார்கள். இவர்கள் முன்பே சுதாரித்து இருந்தால் ஒரு முறைகேடான ஒரு ஆட்சியை தடுத்திருக்கலாம் என்பதுதான் என்னுடைய கருத்து" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dhinakaran say about bjp election