அறிவு இல்லாத எலான் மஸ்க்... பேச்சுக்கே இடமில்லை - ட்ரம்ப் அதிரடி! டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே நிலவிய உறவுகள் தற்போது முற்றிலும் சீர்குலைந்து விட்டன. இதன் தெளிவான சாட்சியாக, “புத்தி இல்லாதவர் ஒருவருடன் பேச விருப்பமில்லை” என மஸ்க்கை குறித்து ட்ரம்ப் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார். இது, ஒரு தொலைபேசி நேர்காணலின் போது வெளிவந்தது.

இருவரும் சமீபத்தில் தொலைபேசி வழியாக பேசியதாக பரவிய செய்தி குறித்து, அதில் உண்மை இல்லை என்றும், மஸ்க் தான் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும், அதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், குடியரசு கட்சி நிர்வாகிகள் இருவரும் சமரசமாக செயல்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில், மஸ்க் “அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்க வேண்டுமா?” என தனது X பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினார்.

முன்னணி தொழிலதிபராக இருந்தாலும், ட்ரம்ப்பின் ஆதரவாளராக இருந்த மஸ்க், அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் குழுவில் முன்னிலை வகித்தார். ஆனால், புதிய பட்ஜெட்டில் அவரின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதால் விரக்தியடைந்தார். குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் $7,500 மானியம் நீக்கப்பட்டமை மஸ்க்கை கோபமடைய செய்தது. இதற்குப் பிறகு அவர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகினார்.

இதற்கெதிராக, ட்ரம்ப் சமூக வலைதளத்தில், “மஸ்க் கோபம் அடைந்ததற்குக் காரணம் அவரின் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி ரத்து செய்ததே” என தெரிவித்துள்ளார். மேலும், “அரசு செலவுகளை குறைக்கும் ஒரே வழி, மஸ்க்கின் ஒப்பந்தங்களையும் மானியங்களையும் நிறுத்துவதே” என எச்சரித்தார்.

இந்த உரையாடல் வர்த்தக தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்புடன் மோதல் தீவிரமானதைத் தொடர்ந்து, டெஸ்லா பங்குகள் ஒரே நாளில் 14% வீழ்ந்தன. இதனால் முதலீட்டாளர்கள் ரூ.1.28 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump vs Elon Musk USA Politics


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->