#BREAKING: தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த அறிவிப்பு! சற்றுமுன் வெளியான செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு, போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பு கருதி முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் செல்வதற்கு தனித்தனியாக வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம் எல் ஏக்களும் முக கவசம் அணிந்து இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.

நேற்று பேரவை கூட்டம் தொடங்கியதும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ அன்பழகன், எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவர்களுக்கும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை, சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று காலை இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் முன்பு தமிழக முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா புகைப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. இதற்கிடையே வெளியான தகவலின்படி, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆறு மசோதா தாக்கல் உள்ளதாகவும்.

அதில், முக்கியமான மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 6 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt school reservation for medical sit issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->