இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை - தமிழக அரசு.! மேலும் ஒரு மொழியை சேர்ப்பதில் சிக்கல் என்ன? - உயர்நீதிமன்றம் கிடுக்குப்புடி.!
tn govt say about 3erd language issue
தமிழகத்தில் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்தி படிக்க வேண்டுமென்று திணிக்கப்படுவதை தான் தமிழக அரசு எதிர்ப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுனன் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில், "தமிழகத்தில் இந்தி படிப்பதை தமிழக அரசு தடுக்கவில்லை. ஆனால், இந்தி திணிப்பை மட்டுமே நாங்கள் எதிர்த்து வருகிறோம்" என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அப்போது நீதிபதிகள், மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? மேலும் ஒரு மொழியை சேர்ப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மக்கள் நலன் கருதி இது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என்றும், தமிழகத்தில் இந்தி படிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தால் வேறு மாநிலங்களுக்கு சென்று பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் நீதிபதிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.
English Summary
tn govt say about 3erd language issue