பிரதமர் மோடியை சந்தித்தபின், தமிழக முதல்வர் சந்திக்க போகும் இரண்டு முக்கிய புள்ளிகள்.! வெளியான பரபரப்பு தகவல்.!
tn cm meet to pm modi and amit shah
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமரை நேரில் சென்று கேட்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நாளை டெல்லி புறப்படுகிறார். நாளை மறுநாள் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டம், பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம், நெய்வேலி என்.எல்.சி. 1,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், ராமநாதபுரம் - தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டம் ஆகிய 5 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி-க்கு, தமிழக முதல்வர் அழைப்பு விக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருடனான இந்த சந்திப்பில், தமிழக முதல்வர் அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் பிரதமருடனான சந்திப்பில் அதிமுக பாஜக கூட்டணி கூட்டணி குறித்தும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை உறுதி செய்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கூட்டணி சம்பந்தமான தொகுதி உடன்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் தெரிகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த பின், உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுடன் சந்தித்து பேச உள்ளார் என்றும், அதன் பின்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
tn cm meet to pm modi and amit shah