ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி.. விழிபிதுங்கி நிற்கும் திமுக.!
tn cm letter release
நேற்று இந்த ஆண்டின் இறுதி பட்ஜெட்டை, சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்பிறகு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், பட்ஜெட்டை விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசிடம் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு கடிதத்தையும் வழங்கினார்.
அந்தக் கடிதம் தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த கடிதத்தை வெளியிடுவோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்டார். கடந்த 10ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.