வெளியான மரண செய்தி.. மிகுந்த துயரத்திலும், வேதனையிலும் முதல்வர் முக ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் பாபான்விடுதி கிராமத்தில் உயிரிழந்த சிறுவன் நிதிஷ்குமார் குடும்பத்துக்கு ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்க  முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பாபான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த திரு நாடிமுத்து, திருமதி போதினி தம்பதியினரின் ஒன்பது வயது மகன் நிதிஷ்குமார் எதிர்பாராத வகையில் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று இலட்சம், உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm announcement for 3 lakh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->