தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி காலமானார்.. சோகத்தில் ஜி கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சேதுராமன் காலமானார். அவரது மறைவிற்கு ஜி கே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் திரு. சேதுராமன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. அவரது மறைவு மதுரை மாநகர் மாவட்டத்துக்கு பேரிழப்பு.

மூத்த வழக்கறிஞரான இவர், இளம் வயதிலேயே பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் ஈர்க்கப்பட்டு, மாணவப் பருவத்தில் இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மக்கள் தலைவர் ஐயா ஜி.கே. மூப்பனார் அவர்களின் தலைமையை ஏற்று இயக்கத்திற்காக சிறப்பாக செயல்பட்டவர். மக்கள் தலைவர் மறைவுக்குப் பிறகு எனது தலைமையில் தனது இறுதி மூச்சு வரை இயக்கப் பணியையும், மக்கள் பணியையும் ஆற்றிய பெருமை மிக்கவர்.

 இயக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக மாவட்டத் தலைவர் ஸ்தானத்தை அடைந்து தொடர் பணியாற்றியவர். தன் உடல்நலன் குன்றி இருந்தபோதும் இயக்கப் பணிக்காக நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்தவர்.

 அனைவரிடமும் அன்பாகப் பழகியவர். அமைதியானவர். நல்ல பண்பாளர்.மாவட்டத் தலைவர் சேதுராமன் அவர்களின் மறைவு த.மா.கா வுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,  இயக்கத்தினருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TMC Party Member Passed Away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->