பெண்களுக்கு இலவச மதுபானம் - திமுகவினர் திறந்துவைத்த தனியார் விடுதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திருப்பூர் தனியார் விடுதியில் நடைபெறவிருந்த டிஜே பார்ட்டியில், பெண்களுக்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள 'ட்வின் பெல்ஸ்' என்ற தனியார் விடுதி ஏற்பாடு செய்திருந்த டிஜே பார்ட்டில், ஜோடியாக வருபவர்களுக்கும், பெண்களுக்கும் இலவச மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், 'இந்த வீடியோ அரசு திறந்து வைத்தது ஹோட்டலை மட்டுமல்ல, சமூக சீர்கெட்டையும் கூட. திருப்பூரில் திமுகவினரால் திறந்து வைக்கப்பட்ட ஹோட்டலில் பெண்களுக்கு இலவச மதுவுடன் DJ பார்ட்டி" என்று சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சிகள் கடுமையாக திமுகவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

உதயநிதி, ஸ்டாலின் உடன் கூடிய அந்த ஹோட்டல் திறப்பு விழா விளம்பரத்தையும், ஹோட்டலின் விளம்பரத்தோடு இணைத்து வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த ஹோட்டல் நிர்வாகம் திமுகவினருக்கு சொந்தமானது என்ற ஒரு குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ளனர்.

இதற்கிடையே, திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு தினேஷ்குமார் என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "திருப்பூர் மாநகரத்தின் நற்பயிருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சமூக கலாச்சார சீர்கேட்டை விளைவிக்கும் வகையிலும் டிஜே பார்ட்டி நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், கடும் விமர்சனங்களுக்கு இடையே ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்றும், இனி இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காது என்றும் உறுதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur DJ Partty DMK Name damage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->