மழை நீரில் கால் நனையாமல் திருமாவளவன் காருக்கு செல்ல தம்பிகள் செய்த ஏற்பாடு.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக. பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீட்டுக்குள் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, வெளியே செல்ல கிளம்பிய திருமாவளவன், மழை நீரில் கால் நினைக்காமல் இருக்க அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஒரு ஏற்பாட்டை செய்தனர். அதன்படி பார்வையாளர்கள் அமரும் இரும்பு சேர்களை ஒன்று ஒன்றாக அடுக்கி அவருக்கு பாதை அமைத்து கொடுத்தனர். அந்த சேரின் மீது சிறிது தூரம் நடந்த பின்பு, அந்த சேரின் மீது திருமாவளவன் நின்றார். அங்கிருந்தவர்கள் வெள்ளத்தில் இறங்கி சேரை இழுத்து வந்து வாசல் வரை விட்டனர். பின்பு காரில் கதவைத்திறந்து வெள்ள நீரில் கால் படாமல் சேரில் இருந்து நேரடியாக காருக்குள் ஏறி அமர்ந்து கிளம்பினார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனிடையே முதலமைச்சர் அமைச்சர்கள் வெள்ளத்தில் இறங்கி ,பார்வையிடும் நிலையில் வெள்ளத்தில் கால் வைக்காமல் திருமாவளவன் செய்த செயலுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan trending video


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->