'ஊழல் செய்ய முடியாமல் துடிக்கிறார்கள்...கல்லாபெட்டி கூட்டணி நிலை தடுமாறி நிற்கிறது'...! - திமுக ஆட்சியை கடுமையாக சாடிய விஜய் - Seithipunal
Seithipunal


நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர் விஜய் உரையாற்றியபோது உற்சாகமும் அரசியல் தாக்கமும் கலந்த பேச்சால் கூட்டத்தை கவர்ந்தார்.அவர் உரையை தொடங்கியபோது, “என் மனதில் இடம் பிடித்த திருநெல்வேலி மக்களே, உங்களுடைய மகன், அண்ணன், தம்பி, நண்பன் விஜய் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து, “முதல்வர் மு.க. ஸ்டாலின் முழு அதிகாரத்துடன் இருந்திருந்தால், இந்த கூட்டமே நடைபெற முடியாது. இப்போது அதிகாரம் இல்லாத முதல்வராக மாறியதால் தான் எளிதாக மக்களை சந்திக்க முடிகிறது. நம்மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டாலும், உண்மை வெளிப்படத் தொடங்கியுள்ளது.

வெளியே தனித்தனியாக தோன்றும் திமுக கூட்டணியும், பா.ஜ.க. கூட்டணியும் உள்ளார்ந்த வகையில் ஒரே நோக்கத்தோடு செயல்படுகின்றன. மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வரக்கூடாது என்பதே அவர்களின் குறிக்கோள்” என்று குற்றம்சாட்டினார்.மேலும், “நான் அரசியலுக்கு வந்தபிறகு அவர்கள் ஊழல் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

அதனால் என்னை குறிவைத்து தாக்குகிறார்கள். கூட்டணிகள் உள்ளே உடைந்து போயுள்ளன. ஒரே கட்சியில் உள்ளவர்களே ஒருவருக்கொருவர் நம்பிக்கையில்லாமல் உள்ளனர்,” என்றும் விமர்சித்தார்.அவர் உணர்ச்சி வசப்பட்டு, “எனக்கு இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல, இது என் வாழ்க்கையின் உணர்வு.

மக்களுக்கு ஏதாவது நடந்தால் எனக்கும் வலி இருக்கும். உங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக நான் இருக்கிறேன். இதுவரை நீங்கள் பிறருக்கு ஓட்டு போட்டீர்கள்; இந்த முறை உங்கள் வீட்டிலுள்ள ஒருவருக்கே ஓட்டு போடுகிறீர்கள் என்று நினைத்து ஆதரியுங்கள்” என்றார்.அவர் மேலும், “நாம் அரசை அமைத்தால் பெண்கள் பாதுகாப்பாகவும், இளைஞர்கள் முன்னேற்றத்துடனும், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் வளமாக வாழ்வார்கள்.

பல தலைமுறைகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும்” என்று வாக்குறுதி அளித்தார்.அவர் கடுமையாக சாடியபோது, “இந்த ஆட்சி முழுவதும் ஊழலில் மூழ்கியுள்ளது. மக்கள் பணத்தில் ஒரு காசும் நான் கை வைக்க மாட்டேன். அதை மற்றவர்கள் சொல்லத் துணிவார்களா? மணல் கொள்ளை, மலை கொள்ளை நடக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.இறுதியாக, “இது மாற்றத்திற்கான தேர்தல். வரும் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் விசில் சின்னத்துக்கு ஓட்டு போட்டு, ஒரு புதிய மாற்றத்தை உருவாக்குங்கள். ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த தேர்தல் ‘விசில் புரட்சி’ ஆக மாற வேண்டும்” என்று மக்களிடம் அழைப்பு விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They struggling commit corruption Kallapetti alliance faltering Vijay strongly criticizes DMK government


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->