#தமிழகம் || திமுக பிரமுகரிடம் இருந்து 100 கோடி ரூபாய் சொத்து மீட்பு.!
thanjai dmk member feb
தஞ்சை மாநகரில் குத்தகை விதிக்கு மாறாக கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றும் பணி இன்று நடைபெற்றது.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே குத்தகை அடிப்படையில் சுதர்சன சபா இயங்கிவந்தது. ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், அங்கு ஆளும் திமுக கட்சி பிரமுகர் மதுபான கடை, மதுபானக்கடை பார் வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் 20 கோடி ரூபாய் ஒப்பந்தத் தொகை செலுத்தப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் இடத்தை கைப்பற்றிய மாநகராட்சி அதிகாரிகள், அங்கு இருந்த நான்கு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.