சற்றுமுன் | ஆடல், பாடல் நிகழ்ச்சி : கட்சி, மதம், சமூகம், ஜாதி - அதிரடி தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை! - Seithipunal
Seithipunal


கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மனுதக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சியின் பிளக்ஸ் போர்டுகள் இருக்கக் கூடாது.

ஜாதிய ரீதியான வன்மங்கள் இருக்கக் கூடாது. 

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக் கூடாது.

குறிப்பிட்ட கட்சி, மதம், சமூகம், ஜாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது என்று, ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Temple Aadal Paadal Program Rule


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->