அதிமுகவில் திடீர் பரபரப்பு.. பொதுக்குழு அரங்கில் மர்ம நபர்கள் செய்த நாச வேலை.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை நடத்திய ஆக வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று பொதுக்குழு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. 

பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இன்று காலை 9.15 மணிக்கு திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும், நுழைவு வாயிலில் 20 பரிசோதனை ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

பொது குழு நடைபெறும் வானகரம் முதல் பொதுக்குழு அரங்கு வரைக்கும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஒரு இடத்தில் கூட ஓ பன்னீர் செல்வத்தின் படம் இடம் பெறவில்லை. 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பேனர்கள் கிழிக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை அதிமுக பொது குழு கூட்டத்திற்காக வைக்கப்பட்டு இருந்த 30-க்கும் மேற்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டது போலவே தற்போதும், பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tearing the banner for admk general committee meeting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->