இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் திடீர் திருப்பம்.. உத்தரவு காலாவதியாகிவிட்டது.! உச்சநீதிமன்ற நீதிபதிகள்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர். 

கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து பொதுக்குழுவிற்கு தடை கோரி மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல எனவும், பொது குழுவில் கட்சி உறுப்பினர்களின் விருப்பப்படி ஜனநாயகம் முறைப்படி எடுக்கும் முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய இபிஎஸ் மேல்முறையீடு மனு மீது விசாரணை தொடங்கியது. உட்கட்சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது என இபிஎஸ் தரப்பு தெரிவித்தது. மேலும், உட்கட்சி விவகாரங்களில் தலையிட சென்னை உயர்நீதிமன்றத்திற்கு குறைவான அதிகாரமே உள்ளது என இபிஎஸ் தரப்பு தெரிவித்ததது.

உட்கட்சி விவகாரங்களில் தலையிட தனி நீதிபதி மறுத்துள்ளார் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கடந்த 23ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காலாவதியாகிவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

supreme court for eps case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->