அறிவாலயம் விரைந்த ஸ்டாலின்! வெற்றிக்கு பின்னர் சொன்னது என்ன?! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த தேர்தலில் தற்போது வாக்கு எண்ணிக்கையானது ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது. இந்தியளவில் பாரதிய ஜனதா கூட்டணி 346 இடங்களில் முன்னிலையிலும்., காங்கிரஸ் கட்சி 92 இடங்களிலும்., பிற கட்சிகள் 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சில இடங்களில் வெற்றியானது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 37 இடங்களிலும்., அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளார்கள். சில இடங்களில் வெற்றியானது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் யாருமே எதிர்பாராத வெற்றியை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவருடைய டுவிட்டரில் " தலை வணக்கம் தமிழகமே!  நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!" என பதிவிட்டுள்ளார். 

தற்போது அறிவாலயத்திற்கு ஸ்டாலின் வருவதையொட்டி அங்கு திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin thanks to tamilnadu people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->