தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழ்ர்கள் திருப்பி அனுப்படுவார்கள்-இலங்கை வெளியுறவுத்துறை .!
srilanka tamilans return to sirlanka
தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் ஈழத்தமிழ் அகதிகள் அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்ப உள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குணவர்த்தன, தமிழகத்தில் இருக்கும் 3 ஆயிரம் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை செல்ல விரும்பிய அந்த மூன்றாயிரம் பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்னும் சில மாதங்களில் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
English Summary
srilanka tamilans return to sirlanka