இபிஎஸ் அணியால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு.!! - Seithipunal
Seithipunal


திமுக அரசின் செயல்பாட்டை கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் பிரதமர் ஏற்பாடு செய்த குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவுக்கு தமிழகத்தில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அனுப்பி விடுக்கப்பட்டு இருந்தது. 

அதிமுக கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  அதிமுகவை எப்படி வழி நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். பாஜகவினர் அவர்கள் கட்சியை பார்த்துக் கொள்வார்கள். அதனால் யாரின் ஆலோசனை கேட்டு கட்சியை நடத்த வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைய வேண்டும். அவர்கள் இணைந்து இருந்தால் தான் தேர்தலில் வாக்குகள் சிதறாமல் அதிமுகவிற்கு சேரும். இல்லையெனில் வாக்குகள் பிரிந்து விடும். அது பாஜகவுக்கு பாதகமாக  முடிந்துவிடும். அதனால் ஒருங்கிணைந்த அதிமுகவை தான் பாஜக மேல் இடம் விரும்புகிறது. இது குறித்து பாஜக தலைவர்களும் அறிவுறுத்தி வரும் நிலையில், எஸ்.பி வேலுமணியின் இந்த பேச்சை பாஜகவில் சாசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sp velumani says about bjp


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->