அயோக்கியனின் வாரிசுகளின் ஆட்சி இது..! பதவிக்காக எந்த எல்லைக்கும் போவார்கள்.!! - ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதை வாங்கி குடித்த மீன் வியாபாரியான குப்புசாமி மற்றும் பூமான்ராவத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஒட்டுநர் குட்டி விவேக் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்ததில் மதுவில் சைனைடு கலந்து இருந்ததால் இருவரும் உயிரிழந்ததாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கொலை செய்யும் நோக்கில் சயனைடு கலக்கப்பட்டதா..? அல்லது சயனைடு கலந்த மதுவை குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா..? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் "டாஸ்மாக் மதுவால் 2 பேர் மரணம்-‘சயனைடு, தற்கொலை’ கதை எல்லாம் தமிழர்கள் நம்ப தயாராக இல்லை! தாமிரபரணி நதியில் தோட்ட தொழிலாளர்களை அடித்து கொன்று, நீச்சல் தெரியாமல் மூழ்கினார்கள் என அறிக்கை வெளியிட்ட அயோக்கியனின் வாரிசுகளின் ஆட்சி இது. பதவியை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போவார்கள்!" என கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shyam Krishnaswamy criticizes DMK govt in thanjavur tasmac bar case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->