செந்தில் பாலாஜிக்கு 25ஆவது முறையாக காவல் நீட்டிப்பு..!
Senthil balaji judicial custody extended 25th time
அமலாக்க துறையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஒரு மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Senthil balaji judicial custody extended 25th time