எத்தனை முறை வந்தாலும்... அன்புக்கு ஈடாகாது - செல்வப்பெருந்தகை தாக்கு.!
Selvaperunthagai statement issue
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,
வட மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு அலை தொடங்கிய நிலையில் தமிழகத்தை புகலிடமாக கருதி பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்ள மீண்டும் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்.
ஆனால் நூறு முறை தமிழகத்திற்கு வந்தாலும் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கோவை பொதுக்கூட்ட மேடையில் நிலவிய உணர்ச்சி பூர்வமான பரஸ்பர நட்பு தமிழக மக்களிடம் காட்டிய உண்மையான அன்பிற்கு இணையாகாது.
பிரதமர் நரேந்திர மோடியின் பகல் வேஷம் எடுபடாது என்பதை அனைவரும் அறிவார்கள். இதன் மூலம் தலைவராகுல் காந்தி, தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Selvaperunthagai statement issue