ஆ.ராசா குறித்து கேள்வி.. செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு செய்த செயலால் கொந்தளிக்கும் இந்துக்கள்.! - Seithipunal
Seithipunal


திக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசிய போது, "உச்சநீதிமன்றம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? ஹிந்துவாக நீ இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன்.

இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு பஞ்சவன். தீண்ட தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? தீண்டத்தகாதவர்களாக இருக்க வேண்டும் என்று எத்தனை பேர் ஆசைப்படுகிறீர்கள்? இந்த கேள்வியை நீங்கள் உரக்கச் சொன்னால்தான் சனாதனத்தை முறியடிக்க முடியும்.

சனாதனத்தை முறியடிக்கிற ஆயுதமாக திராவிடர் கழகம் இருக்கும். என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினர் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து திமுக தலைவர்கள் யாரும் வாய் திறக்கவே இல்லை. 

இத்தகைய சூழலில் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபுவிடம், "திமுக எம்பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறாரே?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கேட்ட சேகர் பாபு உடனடியாக சைகை காட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். 

அதாவது தனது காதில் இந்த கேள்வியே விழவில்லை என்றவாறு அவர் சைகை காட்டி விட்டு அங்கிருந்து நழுவி விட்டார். ஒரு அறநிலையத்துறை அமைச்சர் இந்த விஷயத்தை இப்படி தான் அலட்சியமாக கையாள்வாரா? என்று அவரது செயல் இந்து மக்களிடம் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sekar Babu escape From Press To asking about a rasa


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->