நெருங்கும் மக்களவை தேர்தல்: 5 தொகுதி வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த சீமான்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒரு இணைப்பாளர் சீமான், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் மாவட்ட பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்துள்ளார். 

அதாவது திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு குழு தலைவர் டி. ராஜேஷ், தஞ்சாவூர் தொகுதி எம்.இ. ஹிமாயூன் கபீர், மயிலாடுதுறை தொகுதிக்கு பி. காளியம்மாள், நாகப்பட்டினம் தொகுதிக்கு எம். கார்த்திகா மற்றும் பெரம்பலூர்தொகுதிக்கு ஆர். தேன்மொழி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

திருச்சி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள டி. ராஜா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், ஸ்டெர்லைட், நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர். 

மயிலாடுதுறை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பி.காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களின் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman announced 5 constituencies candidates


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->