81 பேர் கழுத்தறுத்து கொலை.?! வெளியான அதிர்ச்சி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொலை உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் 81 பேருக்கு சவுதி அரேபியாவில் ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபிய அரசின் செய்தித் துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"அப்பாவி பெண்கள், குழந்தைகளை கொலை செய்தவர்களும், அல்கொய்தா - ஐஎஸ் அமைப்புகள், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்ற விவரங்களை சவுதி அரசு வெளியிடவில்லை.

ஆனால், சவுதி அரேபியாவை பொருத்தவரை மரண தண்டனை என்பது கழுத்தை அறுத்து நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1980ஆம் ஆண்டு சவுதி அரேபியா மெக்கா மசூதி கைப்பற்றிய போராட்டக்காரர்கள் 83 பேருக்கு ஒரே நாளில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதே ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது அதிகமாக உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saudi arabia death penalty march


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->