வேதனையுடன் சசிகலா வெளியிட்ட ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயர்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுகிறது. 

இந்நிலையில் இது குறித்து சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி, சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. 

இது தொடர்பாக தொடர்ந்து மூன்று நாட்களாக போராடிவரும் மாணவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் உரிய நியாயம் கிடைத்திடும் வகையில், இதற்கு காரணமானவர்களை உடனே கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை  பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala tweet on july 15


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->