நடிகன் சித்தார்த் விரைவில் கைது?! தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா பரபரப்பு புகார்.!  - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் மாநில பயணத்தின் போது, அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து, தேசிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில், "அராஜகவாதிகளின் சம்பந்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது" என்று தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

தேசிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்ட இந்த பதிவை ரீடுவிட் செய்த நடிகன் சித்தார்த், ஆபாசமான வார்த்தையை குறிக்கும் விதமாகவும், இரட்டை அர்த்தத்தில் தேசிய வீராங்கனை என்று கூட பார்க்காமல் அசிங்கப் படுத்தும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளது. மேலும் அவருடைய ட்விட்டர் அக்கவுண்ட் முடக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை அசிங்கப்படுத்தும் விதமாக பதிவிட்ட  நடிகன் சித்தார்த் மீது உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா புகார் அளித்துள்ளார்.

நடிகன் சித்தார்த் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளதால் அவன் விரைவில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

மேலும், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து, நாட்டின் வீராங்கனை என்ற பெயரில் கூட ஒருவர் தனது கருத்தை தெரிவிக்க கூடாது., அதை நீ எப்படி தெரிவிக்கலாம்., இது உனக்கு அவமானகரமான ஒரு விஷயம் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SainaNehwal Siddharth RekhaSharma


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->