#Breaking ::டாக்டர் கிருஷ்ணசாமி கைது கண்டித்து தென் மாவட்டங்களில் சாலை மறியல்!
road blocked in southern districts for dr.krishnasami arrest
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து தென் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சென்னை கோவை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதே போன்று தென் மாவட்டங்களில் நவம்பர் 2 - விருதுநகர், நவம்பர் 3 - தென்காசி, நவம்பர் 4 - திருநெல்வேலி, நவம்பர் 5- தூத்துக்குடி மாவட்டங்களில் போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி காரில் மதுரை வழியாக சென்றுள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி சென்ற காருடன் அவருடைய ஆதரவாளர்கள் நான்கு கார்களில் சென்றுள்ளனர். சாலை விதிகளை மீறியதாக கூறி காவல் துறையினர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கைது செய்தனர்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் கைது கண்டித்து தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் புதிய தமிழக கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் உண்டானது. இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதால் தென்மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழல் உண்டாகியுள்ளது. சாலை மறியல் போராட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
road blocked in southern districts for dr.krishnasami arrest